கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள் (Brinjal Medical Benefits)

 நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும்   பி2,காணப்படுகின்றன. கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும்   உண்மையில்இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு     thபோன்றநிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்துகார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின்அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கியபங்காற்றுகிறது.

பண்புகள் மற்றும் பயன்கள்:
 வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு,மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும்காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதேநல்லது.
முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக,வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும்ஒன்றாகும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை,புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால்வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன.
இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது.இதனால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக்கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. பாரிச வாயுநோய்தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதைகுறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவதுமுதலியவையும் தடுக்கப்படுகிறது.
முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில்வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான்பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். உடலுக்குசூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல்கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.
கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும்.உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள்கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால்அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.
மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மைபெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம்சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இதுபயன்படும். வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சுஉடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்.

கத்திரிக்காயின்  நன்மைகள்:
  உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். சிறு நீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் கொழுப்பை கரைக்கிறது.
 கத்திரிக்காயிலுள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. இதய நோய்கள் வராமல் காக்கிறது. மூளை செல்களை பாதுகாக்கிறது. சருமத்தை மென்மையாக்கும்.
 இது ரத்தத்தை சுத்தம் செய்கிறது. நச்சுக்களை வெளியேற்றும் மிக முக்கிய வேலையை செய்வதில் முதலிடம் பெறுகிறது. புற்று நோய் வராமல் காக்கலாம். ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

ஏன் கத்திரிக்காய் அலர்ஜியை உண்டாக்குகிறது?
 கத்திரிக்காயில் உள்ள புரொட்டின் தான் அலர்ஜியை உண்டாக்குகிறது. முட்டை உருளைக் கிழங்கு ஏன் தக்காளியும் கூட சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இதற்கு காரணம் அதில் அதிகப்படியான சோலனைன் மற்றும் ஹிஸ்டமின் இருப்பதே ஆகும்.
 சோலனைன் என்ற புரோட்டின் ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு எதிராக இடையூறு விளைவிக்கும். இதனால் வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலை சுற்றல், காய்ச்சல் ஆகியவை உண்டாக்கும்.
 ஹிஸ்டமின் நமது உடலிலேயே சுரக்கப்படும் ஒரு புரோட்டின். நமது உடலிற்கு ஒவ்வாத பொருள் நுழைந்துவிட்டால், பாம்பு விஷத்தை உமிழ்வது போல, நமது உடலிலுள்ள ஒரு வகை செல்கள்(mast cells ) நச்சுக்கள் கொண்ட ஹிஸ்டமினை அலர்ஜி செல்களை நோக்கி ஏவும். அந்த ஒவ்வாத பொருள் வெளியேறும் வரை அலர்ஜியை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். இதனால்தான் சரும அலர்ஜி, கொப்பளம், அரிப்பி தடிப்பு என ஏற்படுகிறது. இந்த ஹிஸ்டமின் கத்திரிக்காயில் அதிகம் உள்ளது. எனவேதான் அலர்ஜி உண்டாகிறது.

Leave a Reply